நீதிபதிகள் நியமனம் – பிப்.11ல் ஆர்ப்பாட்டம்!

Default Image

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்சாதி நீதிபதிகள் ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, சென்னை உயநீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் பதவியேற்றனர்.  இந்த நிலையில், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்