சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வீட்டு தனிமையில் இருக்க கூடிய நபர்களை கண்காணிக்க மருத்துவ படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் 300 மாணவர்களை மாநகராட்சி சார்பாக நியமனம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 135 மாணவர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மருத்துவர்கள் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களின் உடல்நிலை குறித்து அறியும் பணியை துவங்க உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். தற்காலிகமாக பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மாதம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் மேலும் 10,000 படுக்கைகளை உருவாக்க தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…