ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையெடுத்து இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் வருடம்தோறும் ஹஜ் புனித பயணம் செய்து வருகின்றனர். அவர்களை மத்திய அரசு ஹஜ் கமிட்டி அழைத்து சென்று வருகின்றனர். இந்த வருடம் இந்த ஹஜ் புனித பயணத்தில் மேற்கொள்ள சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்தில் 4,300-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…