தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது. இது வரும் ஜூலை மாதம் சிடெட் தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள், https://ctet.nic.in/webinfo/Public/Home.aspx என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். CTET 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24 என்றும், விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 27-க்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் : 24 ஜனவரி 2020
விண்ணப்பப் பதிவு முடியும் நாள் : 24 பிப்ரவரி 2020
விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 27 பிப்ரவரி 2020
தேர்வு நடைபெறும் நாள் : 5 ஜூலை 2020
இந்நிலையில், மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர் பணியில் சேர சி.பி.எஸ்.இ.யால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல்தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. மேலும், சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…