தேசிய விருது வேண்டுமா.? மாற்று திறனாளிகள் நலத்துறையின் முக்கிய அறிவிப்பு.!

சென்னை : மாற்று திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த விருதுகள் தனி நபர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது. தனிநபர் பிரிவுகளில் 5 பிரிவுகளின் கீழும், அமைப்பு பிரிவுகளின் கீழ் 8 பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்ப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் அமைப்புகள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத்திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால். தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் / நிறுவனங்கள் இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்களை www.disabilityaffairs.gov.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், உரிய விண்ணப்பங்களை www.awards.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – செய்தி வெளியீடு #CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/MwjXxVAAyt
— TN DIPR (@TNDIPRNEWS) August 6, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025