NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப பட்டியலை செப்-15 க்குள் இணையத்தில் பதிவேற்றவேண்டும் – பள்ளிக்கல்வித்துறை!

Published by
Rebekal

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப பட்டியலை செப்-15 க்குள் இணையத்தில் பதிவேற்றவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் அனுப்பியுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்ற மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல் கடந்த ஜூலை 20ஆம் தேதியன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பட்டியலிடப்பட்டுள்ள நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல் எனும் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளில் பயிலக்கூடிய முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் புதுப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த பதிவேற்றும் பணியை நிறைவு செய்யவேண்டும், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…

4 minutes ago

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

27 minutes ago

தனுஷ் கிட்ட கதை சொல்லிருக்கேன்! டிராகன் இயக்குநர் சொன்ன சீக்ரெட்!

சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…

1 hour ago

ரோஹித் சர்மா எதுக்குங்க ஓய்வு பெற வேண்டும்? கடுப்பான ஏபி டிவில்லியர்ஸ்!

டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…

2 hours ago

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் அப்டேட் முதல்..பாகிஸ்தான் ரயில் கடத்தல் வரை!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

2 hours ago

இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க! திருமாவளவன் ஸ்பீச்!

சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

3 hours ago