#BREAKING: டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி முறையீடு ..!

Default Image

மதுக்கடைகளை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் முறையீடு.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் மதுக்கடைகளை மூடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் முறையிட்டார்.

அவர் கொரனோ பரவல் அதிகரித்துள்ளதால் வழிபாட்டு கூடங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் வழிபட தடை விதித்துள்ள போதிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும். அவசர வழக்காக விசாரிக்குமாறு ராம்குமார் முறையிட்டார். இதைத்தொடர்ந்து, மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சிவஞானம் , ஆனந்தி தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்