அப்பலோ நிர்வாகம் ஜெ. சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது!

Published by
Venu

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தது அப்பலோ..
இரண்டு சூட்கேஸ்களில் மருத்துவ ஆவணங்களை கொண்டு சென்று விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தது அப்பலோ நிர்வாகம்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
Image result for arumugasamy commission
விசாரணை ஆணைய உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் கொண்டு சென்று தாக்கல் செய்தது அப்பலோ…
இதற்கு முன் தமிழக அரசு ஜெயலலிதா சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது……அந்த அறிக்கையின் விவரம் …
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் தொடர்பாக ஊடகங்களிலும், சில அரசியல் கட்சி தலைவர்களாலும் வதந்தி பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களிடம் இருந்து மருத்துவ அறிக்கையை பெற்று வெளியிட தமிழக அரசு முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த மருத்துவ அறிக்கைகள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ள தகவலை ஒத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, சுவாசிக்க முடியாத நிலையில் அயற்சியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு நோய்த்தோற்று, நீர்சத்து குறைபாடு, சுவாச பிரச்சனைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. முன்பே அவருக்கு நீரிழிவு, உயர்ரத்தஅழுத்தம் இருந்தது என்றும் ஆனால் சில அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுவது போல் காயம் அல்லது வேறு பிரச்சனை எதுவும் இல்லை என அப்பலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பலோ மருத்துவ குழுவினர், சிங்கப்பூர் பிசியோதரபிஸ்ட்டுகள், லண்டன் மருத்துவர் பீலே ஆகியோர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததுடன், அரசு சிறப்பு மருத்துவர்கள் 5 பேரும் தேவையான உதவிகளை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் கிலானி தலைமையிலான மருத்துவ குழுவினர் அக்டோபர் 5ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே ஜெயலிதாவுக்கு தவறான மருந்து எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் ரத்த அழுத்ததிற்கான மருந்துகளையே அவர் எடுத்துக் கொண்டிருந்தததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது காவேரி விவகாரம் உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாகவும், வாய் வழியாக உணவு எடுத்துக் கொள்ளும் விதத்தில் அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எதிபாராவிதமாக டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவ நிபுணர்கள் தேவையான சிசிச்சை அளித்த போதும் அவரது இதயம் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தம்பித்துரை, சசிகலா மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அப்போலோ மருத்துவமனையும் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது ..
source: dinasuvadu.com 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago