மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதனால் அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் இடமாற்றம் செய்வதாக கூறப்பட்டது , இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என் புகார் அளித்தனர்.
கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி.! மாணவர்களின் படிப்பு பாதிப்பு.!
சென்னை தீவுத்திடல் அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் காந்தி நகர் பகுதி மக்களை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக போராடியவர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தீவுத்திடலில் உள்ள குடியிருப்பு வாசிகளை விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியளார்களிடம் பேசிய நல்லக்கண்ணு, குடியிருப்பு மக்களை பெரும்பாக்கத்திற்கு அப்புறப்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும், அதை தொடர்ந்து பேசிய திருமாவளவன், தீவுத்திடல் மக்கள் தற்போது அகற்றப்படமாட்டார்கள் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவாதம் அளித்திருப்பதாக சுட்டிக்காட்டினார். பின்னர் அப்புறப்படுத்தப்பட உள்ள மக்களுக்கு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…