தமிழக எம்.பிகளுக்கு பேச தகுதியில்லை.? மத்திய அமைச்சரின் பேச்சால் பெரும் சர்ச்சை.!

Published by
மணிகண்டன்

டெல்லி: கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தமிழக எம்பிக்களை விமர்சனம் செய்துள்ளார்.

18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற விவாதங்களுக்காக தொடங்கிய கூட்டத்தொடர் முழுவதும் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர் கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டு இன்று மீண்டும் கூடியது.

இன்றைய நாள் அவையின் தொடக்கத்திலேய நீட் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். அந்த சமயம் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசுகையில், தமிழக எம்பிக்களுக்கு மக்களவையில் பேச தகுதியில்லை என்பது போல குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சி விவசாராய உயிர்ப்புகள் குறித்து குறிப்பிட்டு அனுராக் தாகூர் இவ்வாறு குறிப்பிட்டார் இதனை எதிர்த்து தமிழக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு வந்தாலும் மிகச்சிலர் இன்னும் சிகிச்சை பெற்றுக்கொண்டு உள்ளனர். இதனை குறிப்பிட்டு தான் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தமிழக எம்பிகளை விமர்சித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

2 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

2 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

3 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

5 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

5 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

6 hours ago