கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டு எடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில், மே 22-ம் தேதி முதல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது எனவும், ஆய்வு முடியவும் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதற்க்கு முன், பெரிய விலங்கின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த எலும்பு, சுமார் 3 மீட்டர் அளவில் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…