பரபரப்பு…அதிமுக பொதுக்குழுவில் சமூக விரோதிகள்? – பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர்கள் மனு!

Default Image

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின் ஆகியோர் தமிழக டிஜிபி அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்:”சட்ட ரீதியாக அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில்,அதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,தேவை இல்லாதவர்கள்,வேண்டாதவர்கள்,சமூக விரோதிகள் இவர்களெல்லாம் பொதுக்குழுவுக்கு வந்து,பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் பிரச்சனை செய்யும் வாய்ப்பு இருக்கும் நிலையில்,அதனை எதிர்கொள்ள வேண்டிய சூழலை டிஜிபி அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.அதன்பின்னர்,மனுவை படித்த டிஜிபியும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

கடந்த 23 ஆம் தேதி போல் அல்லாமல்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு முழு பாதுகாப்பை காவல்துறை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்