இரண்டாவது நாளாக கோவை கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்திலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்ற நிலையில், இன்று காலையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேசிபி நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் கோவை கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் சில முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…