EPS Case : இபிஎஸ்க்கு எதிரான லஞ்சஒழிப்புத்துறை வழக்கு.! உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

Published by
மணிகண்டன்

கடந்த 2018ஆம் ஆண்டு திமுக பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தமிழக லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலை துறையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார்.

 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி  தனது உறவினர்களுக்கு அளிக்க அதிகாரத்தை பயன்படுத்தினார் என்றும், இதில் கோடி கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கு மீது அப்போது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, திமுக ஆர்.எஸ்.பாரதி தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகு பல்வேறு கட்டங்கள் கடந்து அந்த வழக்கை உயர்நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் , உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் லஞ்சஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் வாதிட்டார். இபிஎஸ் தரப்பில் அரியமா சுந்தரம் வாதிட்டார்.

இதில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கபில் சிபில் வாதிட்டதை எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையாக எதிர்த்தது. ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் திமுக சார்பாக ஆஜரான கபில் சிபில் , தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக வாதிடுகிறார் என எதிர்ப்பு தெரிவித்தார். இதனை அடுத்து கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தங்களுக்கு யார் ஆட்சி, எந்த வழக்கு என தெரியாது. அதனால், இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago