கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு…!

Published by
Rebekal

கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது மேலும் ஒரு மோசடி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தான் எம்.ஆர்.கணேஷ்குமார், எம்.ஆர்.ஸ்வாமிநாதன். இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் எனும் தங்கள் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு ஆண்டில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் பலர் விளம்பரங்களை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை கொடுத்த இவர்கள், அதன் பின் இழுத்து அடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து இந்த நிறுவனத்தில் 15 கோடி ரூபாய் முதலீடு செய்த பைரோஜ் பானு என்பவர் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரிடம் தனது பணத்தை ஹெலிகாப்டர் சகோதரர்கள் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அரசியல் செல்வாக்கு இருப்பதால் தங்களை எதுவும் செய்ய முடியாது என அவர்கள் மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இரு சகோதரர்கள் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவர் மீதும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் பணத்தை திருப்பி கேட்டவர்களிடம் மிரட்டியது தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

7 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

7 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

7 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

9 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago