தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 40 பேர் உயிரிழப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 31,33,990 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 1,57,732 மாதிரிகள் டபரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,580 ஆக உள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,744 ஆக இருந்த நிலையில், இன்று 30,580 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்பு 31,33,990 ஆக காணப்படுகிறது.

கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,218 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று இன்று 24,283 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 28,95,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் சென்னை – 6,383, கோயம்புத்தூர் – 3,912, செங்கல்பட்டு – 1,841, திருப்பூர் – 1,507, கன்னியாகுமரி – 1,248, ஈரோடு – 1,220 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago