தமிழகத்தில் ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 31,33,990 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 1,57,732 மாதிரிகள் டபரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,580 ஆக உள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,744 ஆக இருந்த நிலையில், இன்று 30,580 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்பு 31,33,990 ஆக காணப்படுகிறது.
கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,218 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று இன்று 24,283 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 28,95,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் சென்னை – 6,383, கோயம்புத்தூர் – 3,912, செங்கல்பட்டு – 1,841, திருப்பூர் – 1,507, கன்னியாகுமரி – 1,248, ஈரோடு – 1,220 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…