கஜா புயல் எதிரொலி ..!இன்று நடைபெறவிருந்த பொறியியல் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு …!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Default Image

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இன்று நடைபெறவிருந்த தேர்வு வருகின்ற 24 ஆம் தேதிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் தான் நடைபெறுமா இல்லையா என்று குழப்பத்தில் இருந்தது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்