நாளை பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு..!

Default Image

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார்.

கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 10,11 மற்றும் 12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்