மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவையாற்றியவர்களுக்கு மாநில விருது அறிவிப்பு..!

Published by
murugan

மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதை தமிழக அரசு அறிவித்து.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக கீழ்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

1) மாவட்ட ஆட்சித் தலைவர்.

2) மருத்துவர்.

3) வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம்.

4) அரசு சாராத தொண்டுநிறுவனம்.

5) சேவைபுரிந்த சமூகப் பணியாளர்.

8) சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.

 2021 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள்/ நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பொருட்டு 08.072021 அன்று தேர்வுக் குழுவின் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுகளுக்கென பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி, 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது பின்வரும் நபர்கள்/ நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்கலாம் என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.

சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர்:

இன்னசென்ட் திவ்யா (நீலகிரி மாவட்டம்)

மதுசூதனன் ரெட்டி (சிவகங்கை மாவட்டம்)

விருது:

தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், 25,000 ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழ்.

சிறந்த மருத்துவர்:

பூ.பத்மபிரியா (சேலம்)

விருது:

10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்.

வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம்:

வி ஆர் யுவர் வாய்ஸ் (சென்னை)

விருது:

10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்.

அரசு சாராத தொண்டுநிறுவனம்:

ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி(திருச்சி)

விருது:

10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ், 50 ஆயிரம் ரொக்கப் பரிசு.

சேவைபுரிந்த சமூகப் பணியாளர்:

மரிய அலாசியஸ் நவமணி (நாகர்கோவில்)

விருது:

10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்.

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி:

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (ஈரோடு)

விருது:

10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்.

 

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago