இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவியுங்கள் – எம்பி. ரவிக்குமார்.!

Published by
Ragi

இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதியின் எம் பி ரவிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகிய அமைச்சர்களும், காங்கிரஸ் மாநில தலைவரான கே. எஸ். அழகிரியும், திமுக எம்எல்ஏ சரவணனும் கோரிக்கை வைத்துள்ளனர்.அதற்கான ஆலோசனையை அரசு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வேண்டும் என்று விழுப்புரம் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, தற்போது ஆளும் பாஜக அரசு பாராளுமன்றத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதில் முனைப்புடன் உள்ளது. ஏற்கனவே சிறப்பு வாய்ந்த கட்டிடம் ஒன்று பாராளுமன்றத்திற்கென இருக்கையில் புதிதாக கட்ட வேண்டிய தேவை இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அதை அவர்கள் கேட்பதாக இல்லை. இந்தியாவில் இரண்டாவதாக நாடாளுமன்ற கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும் என்றால் அதை சென்னையில் கட்டுங்கள். குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்துங்கள். வடமாநிலங்களை சேர்ந்த எம்பிக்கள் தென்னிந்திய பண்பாட்டை, வளர்ச்சியை நேரில் பார்த்து தமது மாநிலமும் இப்படி முன்னேற வேண்டும் என்ற உணர்வை பெறட்டும். இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவியுங்கள். அதிகார பரவலாக்கத்துக்கு அது அடையாளமாக திகழும் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு பலர் ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago