D Jayakumar : அம்மாவை பற்றி பேசியதற்கு தான் அண்ணாமலை வாங்கி கட்டிக்கிட்டாரு! அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

Published by
பால முருகன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை கண்டித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ”  மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான விஷயம்.

அதேபோல், நம்மளுடைய வரலாறு என்ன மற்றவர்களுடைய வரலாறு என்ன என்பது பார்க்க வேண்டும்.பேரறிஞர் அண்ணாவுக்கு பெரிய வரலாறு இருக்கிறது. அப்படி பட்ட பெயரிலேயே அண்ணா எனும் பெயரை அண்ணாமலை தன்னுடைய பெயரில் வைத்திருக்கும் போது அண்ணாவை பற்றி  அவதூறு பேசகூடாது.

ஏனென்றால், அவர் பேசியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த தொண்டனும் சரி ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எனவே நாங்களும் எங்களுடைய பதிலை கொடுத்து விட்டோம். இனிமேல் அதேபோன்று அண்ணாமலை விமர்சனமாக பேச மாட்டார் என எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே அம்மாவை பற்றி பேசினத்துக்கு தான் அண்ணாமலை வாங்கி கட்டிக்கிட்டாரு.

ஏற்கனவே நான் சில முறை பேசிவிட்டேன் திரும்பவும் இப்போது அதைப்பற்றி பேசிவிட்டோம். அவர் கட்சியை வளர்ப்பதற்காக பிரச்சினைகளைப் பற்றி ஆயிரம் பேசட்டும் அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும்  இல்லை. ஆனால் மறைந்த தலைவர்களை பற்றி கொச்சை படுத்தி பேசவே கூடாது இது தான் எங்களுடைய வேண்டுகோள்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

5 minutes ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

32 minutes ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

1 hour ago

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…

2 hours ago

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…

2 hours ago

முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…

3 hours ago