தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருவது பற்றி தெரியாது.! அண்ணாமலை பதில்.!

Default Image

வருகிற அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருகை குறித்து எந்த தகவலும் வரவில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதில் கூறினார். அப்போது செய்தியாளர்கள் வருகிற தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருவதாக கூறப்படும் தகவல் குறித்து கேட்டனர்.

அது குறித்து பதில் கூறிய அண்ணாமை, ‘ பிரதமர் வருகை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.’ என பதில் கூறினார்.

முன்னதாக, முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு அவர் பிறந்த ஊரான பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வரவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்