திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தோல்வி. மத்திய அரசு எங்கும் இந்தியை கட்டாய மொழியாக மாற்றவில்லை. அதற்கான ஆதாரத்தை முதல்வர் ஸ்டாலின் தான் அளிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கை என்பது மும்மொழி கல்வி கொள்கையே – பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இந்தி எதிர்ப்பு மற்றும் பொதுவான நுழைவு தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், ‘ திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு எங்கும் இந்தியை கட்டாய மொழியாக மாற்றவில்லை. அதற்கான ஆதாரத்தை முதல்வர் ஸ்டாலின் தான் அளிக்க வேண்டும். ‘ என பேசினார்.
மேலும், ‘ திமுக மீது மக்களுக்கு எதிர்ப்பு வந்தால், அவர்கள் இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவார். புதிய கல்வி கொள்கை என்பது மும்மொழி கல்வி கொள்கையே தவிர, இந்தி கட்டாயம் என்பதில்லை. திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழ் மொழி கட்டாயமில்லை. ‘ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…