தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடி வீட்டிற்கு முன்போ, நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்போ, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு முன்போ தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.
சிதம்பரத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் தலைமையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பாஜகவிடம் நெருக்கம் காட்டுவதால், பலரும் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை சுட்டி காட்டி பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடி வீட்டிற்கு முன்போ, நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்போ, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு முன்போ தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். காவிரி டெல்டாவில் வந்து அவர் உண்ணாவிரதம் இருந்தது பொருளற்ற ஒன்று. யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…