முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை – மாணிக்கம் தாகூர் எம்.பி

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது என மாணிக்கம் தாகூர் எம்.பி  பேச்சு.

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் அவர்கள் கலந்து கொண்டார்.  அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரோடு தேர்தல் வெற்றி என்பது தமிழக அரசின் வெற்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் வெற்றி .

அதிமுகவின் தோல்வி என்பது அதிமுக மக்களுடைய நம்பிக்கை என்றும் பெற முடியாது என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு . பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துவார்கள் என தெரிவித்து விட்டு தற்போது  தேர்தல் ஆணையத்தின் மீது குறை சொல்வது மத்திய அமைச்சர் அமித்ஷாவை குறை சொல்வதற்கு சமம்.

அண்ணாமலை ஈரோட்டில் அதிமுகவிற்கு தோல்வியை பெற்று தந்தது போல, கர்நாடகாவிலும் பாஜகவிற்கு தோல்வியையும்,  காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியையும் பெற்று தருவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு பாஜக மாநிலத்தில் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்