அண்ணாமலை: உடுப்பியில் எஸ்.பியாக பொறுப்பேற்ற போது தனது கட்டுப்பாடிற்குள் தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தேன் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மிக தீவிரமாக அரசியல் களத்தில் ஈடுப்பட்ட வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பின்னர் தற்போது முதன் முறையாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அண்ணாமலை அரசியல் களம் தாண்டி தனது காவல்துறை பணி அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
அப்படி அவர் கூறுகையில், உடுப்பியில் அண்ணாமலை மாவட்ட எஸ்.பியாக முதன்முதலாக பணியாற்றிய தொடங்கிய போது, குறிப்பிட்ட நேரத்தில் சில முக்கிய விஷயங்களை நாங்கள் செய்தோம் என குறிப்பிட்டார். உடுப்பி எஸ்பியாக தான் பொறுப்பேற்பதற்கு முன்பு, அங்கு ஒரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதனால் அந்த சமயம் நாங்கள் அங்குள்ள காவல் நிலையத்தின் மொத்த அதிகாரிகளையும் இடமாற்றம் வேண்டி இருந்தது. அது நான் பொறுப்பேற்ற சமயம் ஆகும்.
அதன் பிறகு தனது பொறுப்பில் உடுப்பி மாவட்டம் இருக்கும் சமயத்தில் ஏதாவது தவறு நடந்தால், தொடர்புடைய அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையாக உத்தரவிட்டேன் என்றும், அடுத்து மாவட்டத்தில் உள்ள 14-15 லட்சம் மக்களின் பாதுகாவலர்களாக நாம் செயல்பட வேண்டும் என்று கூறி, நாங்கள் மிகவும் வலிமையாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டோம் என்று உடுப்பு மாவட்ட எஸ்பியாக இருந்த சமயத்தில் தனது அனுபவங்களை PTI நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…