ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

Published by
Surya

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகல்ள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அந்தவகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதற்கான வழில்காடு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 60 மதிப்பெண்களுக்கான தேர்வுகள் ஒரு மணிநேரம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் எனவும், மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்க இயலாமல் போனால், நேரடியாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

மேலும் லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வினை எழுதலாம் எனவும், 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேர்வு, 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும் என, தேர்வு எழுதும் போது மாணவர்கள் தங்களுடன் வேறு யாரையும் அமர வைக்கக் கூடாது என்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

முடிச்சி விட்டிங்க போங்க.! அந்த சத்தம்… 138 dB… தோனியை முந்திய ‘கிங்’ கோலி.!

முடிச்சி விட்டிங்க போங்க.! அந்த சத்தம்… 138 dB… தோனியை முந்திய ‘கிங்’ கோலி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…

20 minutes ago

மேட்சை மாற்றிய மிரட்டலான கேட்ச்..! மிரள வைத்த சால்ட் – டிம் டேவிட்.., பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை :  ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…

1 hour ago

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…

2 hours ago

சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது.., இனி எவ்வளவு தெரியுமா? மத்திய அரசு அதிரடி…

சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…

2 hours ago

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

10 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

11 hours ago