அங்கொட லொக்கா வழக்கு.. சிவகாமசுந்தரியின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

அங்கொட லொக்கா வழக்கில் கைதான மதுரை வழக்கறிஞர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இலங்கையின் நிழல் உலக தாதா என கூறப்படும் அங்கொட லொக்கா கடந்த 2018-ம் ஆண்டு முதல் கோவையில் உள்ள சேரன்மாநகர் பகுதியில் தங்கி உள்ளார். கடந்த மாதம் 3-ம் தேதி அங்கொட லொக்கா மாரடைப்பால் உயிரிழந்தார்.
அங்கொட லொக்காவின் உடலை அவரது காதலி அம்மானி தான்ஷி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் மதுரையில் போலி ஆவணங்கள் வைத்து ஆதார் அட்டை தயாரித்து உடலை எரித்தனர்.
போலியான ஆவணங்கள் மூலம் உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால், இந்த வழக்கு பீளமேடு போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அங்கொட லொக்கா காதலி அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்மானி தான்ஜி சென்னை புழல் சிறையிலும், தியானேஸ்வரன் பெருந்துறை கிளை சிறையிலும் அடைக்கப்படுள்ளனர். கோவை சிறையில் வழக்கறிஞர் சிவகாமசுந்தரி அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமினில் விடுவிக்க கோரி வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனு மீதான உத்தரவு வருகின்ற 24-ம் தேதி(அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் ஜாமீன் மனுவை கோவைக்குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024