அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பிற்கு வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்று வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில் இயக்குநா் அட்லி இயக்கத்தில் நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று பிகில் படமானது வெளியானது. 150 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் வெற்றி பெற்றதாக படக்குழுவாலே அறிவிக்கப்பட்டது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. படத்தின் வருமான விவரத்தை படக் குழு மறைத்ததாகக் கூறப்பட்டது.இந்த தகவல்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறையினா் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை நடத்தினர்.
இந்த சோதனையில் ‘பிகில்படத்துக்கு மதுரையைச் சோ்ந்த பைனான்சியரும், திரைப்படத் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் தான் நிதி உதவி செய்திருப்பது தெரியவரவே அன்புச்செழியனுக்குச் சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினா் அதிரடி சோதனை நடத்தியது.மேலும் படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகய் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து வருமானவரித்துறை விசாரித்தது.சென்னை மற்றும் மதுரையில் கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில்ஒரே நேரத்தில் நடைபெற்ற சோதனைகள் படிப்படியாக நிறைவடைந்தது.
ஆனால் ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட், கல்பாத்தி எஸ் அகோரம் இல்லம் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர் வீடு, அலுவலகம் என பல இடங்களில் நான்கு நாள்களாக நடைபெற்று வந்த சோதனையின் முடிவில், அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததாக தெரிகிறது.
மேலும் பைனான்சியரிடமிருந்து மட்டும் கட்டுகட்டாக பணம் மற்றும் 2 பைகள் அடங்கிய ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பிற்கு வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவருடைய வீட்டில் இருந்து 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…