தமிழகத்தில் பிற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் கட்சி தொடங்கவில்லை என்று பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் பாமக கட்சியின் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட அன்புமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில் கட்சி தொடங்குகின்ற அத்தனைபேரும் அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்று சொல்லி வருவார்கள். நாங்கள் பாமகவை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. அ. தி.மு.க , தி.மு.க., காங்கிரஸ் , போன்ற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் கட்சியை தொடங்கவில்லை. எங்கள் கட்சி ஆட்சி அமைப்பதற்காக தான் நாங்கள் கட்சியை தொடங்கினோம் .வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமோ அல்லது இல்லையா ? அப்படி இருந்தால் யாருடன் இருப்போம் என்பதையெல்லாம் தேர்தலுக்கு முன் பாமக நிறுவனர் ராமதாஸ் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…