தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்தவர் – அன்புமணி ராமதாஸ் இரங்கல்.!

Default Image

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் – அன்புமணி ராமதாஸ் இரங்கல்.

கடந்த 10 நாட்களுக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சையா பலனின்றி காலமானார். இவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது பாமக கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வசந்தகுமார் மறைவுக்கு இரங்கலை தெரிவித்து, அவரது, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் என்று கூறியுள்ளார். மக்களவை உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு வந்தவர். தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்