KN Ramajayam [File Image]
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முதலில் சிபிஐ, சிபிசிஐடி என புலனாய்வு பிரிவினர் விசாரித்தும் குற்றவாளி யார் என தகவல் கிடைக்கப்பெறவில்லை.
இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் சகோதரர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாததால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்து வந்தது. இதில், இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வருகையில், அரசு தரப்பில் வாதிடுகையில் இதுவரை 1040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதனை ஏற்று விரைவில் வழக்கை முடித்துவைக்க வேண்டும் எனவும், விரைவில் வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…