வாய் பேச முடியாத மாற்று திறனாளியான மூதாட்டிக்கு இரத்த தானம் செய்த, கண்பார்வையற்ற செம்பட்டூர் அரசு பள்ளியின் ஆசிரியர் சிவா.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மூதாட்டி சகுந்தலா. இவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவருக்கு அவசியமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தன்னார்வ அமைப்பினர் வாட்ஸ்அப் குழுவில் இந்த செய்தியை பதிவிட, கண்பார்வையற்ற செம்பட்டூர் அரசு பள்ளியின் ஆசிரியர் சிவா அந்த மூதாட்டிக்கு ரத்தம் அளிப்பதற்கு முன் வந்துள்ளார்.
இதனையடுத்து, சிவா அவரது நண்பர் வீரமாமுனிவர் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்துள்ளார். சிவாவின் இந்த உதவும் மனதை பாராட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி ரத்ததான சான்றிதழை வழங்கி பாராட்டி உள்ளார்.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…