எங்களுக்கு பானை தான் வேண்டும்… அடம்பிடிக்கும் விசிக.!

Published by
மணிகண்டன்

Election2024 : தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விசிக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போலவே சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் விசிக போட்டியிடுகிறது. கடந்த முறை விழுப்புரத்தில் ரவிக்குமார் உதயசூரியன் (திமுக) சின்னத்திலும், சிதம்பரத்தில் திருமாவளவன் விசிக சின்னமான பானை சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்த முறை இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடபோவதாக விசிக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, பானை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை விசிக அணுகி இருந்தது. இந்த கோரிக்கையில் பதில் கூறியிருந்த தேர்தல் ஆணையம், பானை சின்னத்தை விசிகவுக்கு ஒதுக்க முடியாது என கூறியிருந்தது. கடந்த தேர்தலில் 1 சதவீதம் கூட வாக்கு வாங்கவில்லை (தமிழகம் முழுவதும்). 3 ஆண்டுகளாக கட்சி கணக்கு வழக்குகளை ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் கூறியிருந்தது.

இதனை அடுத்து, மீண்டும் தேர்தல் ஆணையத்தை விசிக அணுகியுள்ளது. கடந்த கால சட்டமன்ற தேர்தல்களில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 1.16 சதவீத வாக்குகள் மேலே பெற்றுள்ளோம். கடந்த 2019ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றோம். அதற்கான வாக்கு விகிதம் கணக்கிடப்படவில்லை. இந்த முறை தமிழகம் , கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா என 5 மாநிலத்தில் தேர்தலில் விசிக போட்டியிடுகிறது என பல்வேறு கோரிக்கைகளை கூறி பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என விசிக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது.

Recent Posts

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

34 minutes ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

34 minutes ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

1 hour ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

1 hour ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

2 hours ago