எங்களுக்கு பானை தான் வேண்டும்… அடம்பிடிக்கும் விசிக.!

Published by
மணிகண்டன்

Election2024 : தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விசிக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போலவே சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் விசிக போட்டியிடுகிறது. கடந்த முறை விழுப்புரத்தில் ரவிக்குமார் உதயசூரியன் (திமுக) சின்னத்திலும், சிதம்பரத்தில் திருமாவளவன் விசிக சின்னமான பானை சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்த முறை இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடபோவதாக விசிக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, பானை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை விசிக அணுகி இருந்தது. இந்த கோரிக்கையில் பதில் கூறியிருந்த தேர்தல் ஆணையம், பானை சின்னத்தை விசிகவுக்கு ஒதுக்க முடியாது என கூறியிருந்தது. கடந்த தேர்தலில் 1 சதவீதம் கூட வாக்கு வாங்கவில்லை (தமிழகம் முழுவதும்). 3 ஆண்டுகளாக கட்சி கணக்கு வழக்குகளை ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் கூறியிருந்தது.

இதனை அடுத்து, மீண்டும் தேர்தல் ஆணையத்தை விசிக அணுகியுள்ளது. கடந்த கால சட்டமன்ற தேர்தல்களில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 1.16 சதவீத வாக்குகள் மேலே பெற்றுள்ளோம். கடந்த 2019ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றோம். அதற்கான வாக்கு விகிதம் கணக்கிடப்படவில்லை. இந்த முறை தமிழகம் , கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா என 5 மாநிலத்தில் தேர்தலில் விசிக போட்டியிடுகிறது என பல்வேறு கோரிக்கைகளை கூறி பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என விசிக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது.

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

49 minutes ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

1 hour ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

2 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

4 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

4 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

5 hours ago