3 மணி நேரம் தாமதமாக வந்ததால், நெஞ்சுவலியால் துடித்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை பாடி தெற்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு வயது 65. இவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் வேலைக்கு செல்லாத நிலையில், இரவு குடும்பத்தினருடன் அமர்ந்து, உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த இவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, இரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். தொடர்ந்து 10-ற்கும் மேற்பட்ட முறை அழைப்பு விடுத்தும் வராத நிலையில், அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் 3 மணி நேரம் கழித்து 108 வந்துள்ளது. ஆம்புலன்சில் உள்ளவர்கள் பிரகாஷை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆம்புலன்ஸை முற்றிகையிட முயன்ற பொதுமக்களை, காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். கொரோனா சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற அவசரமான சூழ்நிலைக்கு அம்புலன்ஸ் வருவதற்கு மறுப்பதால், அரசு இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…