அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது-தலைமை  செயலாளர் சண்முகம்

Default Image

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 21-வது நாளான இன்று ரோஸ் நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார்.இன்று விடுமுறை தினம் என்பதால்  அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அத்திவரதர் தரிசனம் குறித்து தமிழக தலைமை  செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அத்திவரதர் உற்சவத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,000 தொண்டர்கள் பக்தர்களை ஒழுங்குப்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்