தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 வரை கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

Published by
Rebekal

தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தற்பொழுது மக்கள் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்துவதை புரிந்து கொண்டு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து தற்பொழுது மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 வரை கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 1 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு இலவசமாக ஒரு கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் 7.24 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ள நிலையில் மேலும் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago