சாதிய வெறிக்கு சவுக்கடி கொடுத்த அமிர்தம்! தடைகளை தகர்த்தெறிந்து இன்று தேசிய கொடியை ஏற்றினார்!

Default Image

தடைகளை தகர்த்தெறிந்து இன்று தேசிய கொடியை ஏற்றினார் அமிர்தம்.

திருவள்ளூர் அருகே பட்டியலின ஊராட்சிமன்ற தலைவரான திருமதி.அமிர்தம் அவர்களை, ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமார் அவர்கள், கொடியேற்ற அனுமதி மறுத்துள்ளார். இதனையடுத்து, ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ஊராட்சிமன்ற துணை தலைவரின் கணவர் உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஆத்துப்பக்கம் ஊராட்சி தலைவரை அழைத்து நேரில் விசாரிக்கவுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம், இன்று ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்