காலியாகும் தினகரன் கூடாரம் !முக்கிய நிர்வாகிகள் விலகல் !அடிமேல் அடிவாங்கும் தினகரன்

Published by
Venu

புதுவை மாநில தலைவராக வேல்முருகன் நியமிக்கப்பட்டதற்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.

இதன் பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜன்,தங்கத்தமிழ்செல்வன் என அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றுள்ளனர்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தினகரன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதாவது புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார்.அந்தவகையில் தான் புதுவை மாநில தலைவராக வேல்முருகன் நியமனம் செய்யப்பட்டார்.தற்போது புதுவை மாநில தலைவராக வேல்முருகன் நியமிக்கப்பட்டதற்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் 40 பேர் விலகியுள்ளனர். புதுவை துணைத் தலைவர், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் என அனைவரும் விலகியுள்ளனர்.மேலும் ராஜினாமா கடிதத்தை  தினகரனுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.ஏற்கனவே தமிழகத்தில்  முக்கிய நிர்வாகிகள் சென்றுள்ள நிலையில் தற்போது புதுவையிலும் நிர்வாகிகள் சென்றுள்ளது தினகரன் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Published by
Venu

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

1 hour ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

2 hours ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

3 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago