அம்மி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட பாமக மகளீர் அணி தலைவி!

Default Image

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்தவர் நிர்மலா.இவர் தனது கணவரை இழந்த பின்பு தனது தாயுடன் அரக்கோணம் அருகில் உள்ள சின்னகைனூரில் வசித்து வருகிறார்.

தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்கள் வெளியில் வந்து அக்கம்பக்கத்தினரிடம் பேசுவது வழக்கம்.ஆனால் இவர்கள் சமீபத்தில் வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது நிர்மலா ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.அவரின் அருகில் ஒரு அம்மிக்கல்லும் ரெத்தக்கறையுடன் இருந்துள்ளது.அவரின் தாய் காயங்களுடன் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பின்பு அவரின் தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த கொலை சம்பவம் காரணமாக மூன்று தனிப்படை பிரிவினரை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்