அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் – சென்னை மேயர்

Default Image

அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சி வருவாய் இழப்பு என மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் தகவல்.

சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்,  சென்னையில் அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் கூறினார். இதற்கு பதிலளிடது பேசிய சென்னை மேயர் பிரியா, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருக்கும் என திட்டவட்டமாக பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்