#ELECTION BREAKING : மார்ச்7-ல் அமித்ஷா; 10-ல் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை..!

Default Image

தேர்தல் பரப்புரைக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 7-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார். இவரை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தரவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி, காரைக்கால்  மற்றும் விழுப்புரத்தில் பரப்புரையை மேற்கொண்ட அமித்ஷா மீண்டும் பரப்புரைக்காக வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்