சாலையோர கடையில் தோசை சாப்பிட்ட அமித்ஷா…!

Default Image

கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பாஜக தொண்டர் ஒருவரின், சாலையோர உணவு விடுதியில், அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார்.

இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின், கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார்.

அப்போது வழியில், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பாஜக தொண்டர் ஒருவரின், சாலையோர உணவு விடுதியில், அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார். இட்லி, தோசை மற்றும் மிளகு ரசம் ஆகியவற்றை உட்கொண்டார். பின் தோசை நன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியும் உணவு உட்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்