மீண்டும் பறவை காய்ச்சல்.. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Published by
பால முருகன்

birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் சில வாத்து பண்ணைகள் இருக்கிறது. அதில் வளர்ந்து வந்துகொண்டு இருந்த வாத்துகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தொடர்ச்சியாக உயிரிழந்துகொண்டே வந்தது. இதன் காரணமாக நடத்தப்பட்ட சோதனையில் உயிரிழந்த வாத்துகள் பறவை காய்ச்சல் பரவி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, இந்த பறவை காய்ச்சல் பரவலை உடனடியாக தடுக்கவேண்டும் என கால்நடை பராமரிப்பு துறை மிகவும் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எந்தெந்த இடங்களில் எல்லாம் வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது என்பதனை கண்டுபிடித்து அந்த பண்ணைகளில் இருந்து கிட்டத்தட்ட 1 கி.மி. வரை எந்த இடங்களில் எல்லாம் வாத்துகள்,கோழிகள் வளர்க்கப்படுகிறதோ அதனை அழிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல், அதனுடைய இறைச்சிகள் மற்றும் முட்டைகள் கூட விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவி வரும் இந்த பறவை காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் இருந்த நிலையில், சமீபத்தில்,  பொது சுகாதாரத் துறை ” தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை. இருந்தாலும் அதற்கான அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக” தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் ஆகி இருக்கிறது. குறிப்பாக, ஆனைகட்டி, வாளையாறு, முள்ளி, மேல்பாவி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

28 minutes ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

57 minutes ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

1 hour ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

4 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

4 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

5 hours ago