வேல் யாத்திரையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.? விளக்கமளித்த எல்.முருகன் .!

Published by
Ragi

வேல் யாத்திரையால் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் தங்களுக்காக வந்தது என்று எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.

பாஜக சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல்யாத்திரை நடைபெறும் என்று அறிவித்த நிலையில் ,அதற்கு தமிழக அரசு தடை விதித்தது . ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கடந்த 6-ஆம் தேதி தமிழக அரசின் தடையை மீறி வேல்யாத்திரை நடத்தி திருத்தணியில் வைத்து போலீசார் கைது செய்து விட்டு அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர் .

மேலும் இரண்டாவது தினமாக நேற்றைய தினமும் தடையை மீறி கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தினர் . வேல் யாத்திரையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கி அவ்விடத்தில் இருந்து நகர முடியாமல் அரை மணியாக ஒரே இடத்தில் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து வேல்யாத்திரையில் கலந்து கொண்ட பாஜக தலைவர் எல்.முருகன் ,  கணேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் திருவொற்றியூரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்றும் எல்.முருகன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து தொடங்கியுள்ளனர் . அப்போது செய்திகளை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரையானது செங்கல்பட்டு மாவட்டத்தில் எனது தலைமையிலும், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டையிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து ஆம்புலன்ஸ் விவகாரம் குறித்து பேசிய எல்.முருகன் , அந்த ஆம்புலன்ஸ் தங்களுக்காக வந்தது என்றும், அது எங்களது ஆம்புலன்ஸ் என்றும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

41 minutes ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

1 hour ago

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

1 hour ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

2 hours ago

ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…

3 hours ago

தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?

சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…

3 hours ago