வீட்டிலேயே பிறந்த குழந்தை: கடவுளாக வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.!

Published by
கெளதம்

கோவை : பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும், அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காயத்ரியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அந்த நேரத்தில் கர்ப்பணி பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தருவாயின் சில நிமிடங்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளார். இந்த சூழலில், அவரை மருத்துவமனைக்கு அழைத்த செல்ல முடியாத இக்கெட்டான நிலையை கருத்தில் கொண்ட ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும், நேரத்தை விரையமாக்காமல், புத்தி கூர்மையுடன் செயல்பட்டு அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.

மருத்துவ உதவியாளரின் கைகளால் இந்த உலகத்தை பார்க்க வந்த அந்த ஆண் குழந்தை, அழுதுகொண்டே தன் ஆரோக்கியத்தையும் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து, அடுத்தகட்ட சிகிச்சைக்காக அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தாய் மற்றும் சேய் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருவரும் நலமுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும் நிலையில், இதற்கு காரணமாக அமைந்து கடவுள் போல் வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…

5 minutes ago

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

1 hour ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

2 hours ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

3 hours ago