அம்பேத்கர் உருவப்படம் விவகாரம்: சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுக – வைகோ வலியுறுத்தல்!

Published by
பாலா கலியமூர்த்தி

நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் நீக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் திருவள்ளுவர் மற்றும் மகாத்மா காந்தி உருவப்படங்களை தவிர மற்ற தலைவர்கள் படங்கள் இடம்பெறக்கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியது. இதில், அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்தை நீக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதைக் கண்டித்து, தமிழகத்தில்  அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயர்நீதிமன்றம் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் தலைவர்களின் உருவப்படம் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டுப்பாட்டை திரும்ப பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுபோன்று, விசிக தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

1 hour ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

2 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

2 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

14 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago