திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் இடம்பெற்ற ட்ரோன் கண்காட்சி காண்போரை பெரிதும் கவர்ந்தது. தி.மு.க இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து மாநாடு நடைபெறும் திடலுக்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு சுடரினை ஒப்படைத்தார்.
திமுக இளைஞரணி மாநாட்டு சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்த அமைச்சர் உதயநிதி!
இதனை தொடர்ந்து மாநாட்டு திடல் அருகில், 1500 ட்ரோன்களை கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன் ஷோ-வை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் பார்வையிட்டனர். அதன்போது திமுகவின் வரலாறு, ஆட்சியின் சாதனைகள், இளைஞரணி தோற்றம் குறித்து காட்டப்பட்டது. மேலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, மு.க ஸ்டாலின் ஆகியோர்களின் உருவங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் ட்ரோன் கண்காட்சியில் காட்டப்பட்டதை தொண்டர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…