மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக , பேரிகார்டு (தடை) வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் நடைபெறுகின்றன. என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘ மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக , பேரிகார்டு (தடை) வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் நடைபெறுகின்றன.
இருந்து இந்த விபத்து சரியாக எந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என நேரம் தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து நாங்கள் சோதனை செய்து வருகின்றோம். இந்த விபத்தை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. இறப்பு தவிர்க்கப்பட வேண்டியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இறந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அறிந்ததும் உடனடியாக சென்று அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இருந்தும் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது வருத்தத்திற்குரியது.
இரவு 2.30 மணி வரை பணிகள் நடைபெற்றது. மேற்பார்வையாளர் அங்கு 1.30 மணிவரை சென்று பார்த்துள்ளார். அதற்கான குறிப்பேடுகள் இருக்கின்றன. என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…