ஏற்கனவே 6 லட்சம் கோடி கடன்., எப்படி முடியும் சொல்ல சொல்லுங்க பாக்கலாம் – சீமான்

Default Image

இலவசம் என்ற பெயரில் வேற்று அறிக்கைகளை திராவிட கட்சிகள் வெளியிட்டு வருவதாக சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கடந்த 12ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியில் பாதி பெண்கள் பாதி ஆண்கள் என வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் தேர்தலில் முதல்முறையாக திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சீமான், இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்கனவே சுமார் ரூ.6 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், இலவசம் என்ற பெயரில் வேற்று அறிக்கைகளை திராவிட கட்சிகள் வெளியிட்டு வருவதாக விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் வாசிங்மிஷின் இலவசம் என்று கூறியுள்ளார்கள். தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட குடும்ப அட்டை இருக்கிறது. ஒரு வாசிங்மிஷின் விலை ரூ.15,000 வரை வரும், ஆகையால், இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து கொண்டு வருவார்கள், அதுக்கு ஒரு திட்டத்தை வகுத்து சொல்லுங்கள் என்று சீமான் கேள்வி எழுப்பி, ஒரு துறையை கூட விடாமல் அனைத்து துறையிலும் கடன் உள்ள நிலையில், எப்படி முடியும் என்று விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்